என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லிபியாவில் வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் பலி
Byமாலை மலர்4 April 2020 7:17 AM GMT (Updated: 4 April 2020 7:17 AM GMT)
லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
திரிபோலி:
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவ தளபதி கலீபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இருதரப்பும் மோதலை நிறுத்திவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிளர்ச்சி ராணுவம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசு படையும் தக்கபதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலி அருகே மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து லிபியா விமானப்படை விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின.
இதில் கிளர்ச்சி ராணுவவீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த 3 ஆயுதக்கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவ தளபதி கலீபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இருதரப்பும் மோதலை நிறுத்திவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிளர்ச்சி ராணுவம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசு படையும் தக்கபதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலி அருகே மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து லிபியா விமானப்படை விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின.
இதில் கிளர்ச்சி ராணுவவீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த 3 ஆயுதக்கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X