என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்4 April 2020 6:53 AM GMT (Updated: 4 April 2020 6:53 AM GMT)
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இன்னும் நிறைய மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தாக்கி இருக்கக்கூடும்.
இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கக்கூடிய அளவுக்கு இல்லை. எல்லோரும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனோ, அது கூட இல்லாமலோதான் இருக்கின்றனர். சிலர் குணமடைந்து விட்டனர். பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இன்னும் நிறைய மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தாக்கி இருக்கக்கூடும்.
இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கக்கூடிய அளவுக்கு இல்லை. எல்லோரும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனோ, அது கூட இல்லாமலோதான் இருக்கின்றனர். சிலர் குணமடைந்து விட்டனர். பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X