என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளம் மீது ராக்கெட் தாக்குதல்
Byமாலை மலர்17 March 2020 11:32 AM GMT (Updated: 17 March 2020 11:32 AM GMT)
ஈராக் நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் தங்கியிருந்த ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாக்தாத்:
ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை அழிப்பதற்காக உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேட்டோ படையினர் ஈராக்கில் உள்ள ராணுவத்தளங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த படையினரை குறிவைத்து போராளி குழுவினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள பேஷ்மயா என்ற பகுதியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கி இருக்கும் ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று இரண்டு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X