search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராகில் உள்ள அமெரிக்க படை வீரர் (கோப்பு படம்)
    X
    ஈராகில் உள்ள அமெரிக்க படை வீரர் (கோப்பு படம்)

    ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளம் மீது ராக்கெட் தாக்குதல்

    ஈராக் நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் தங்கியிருந்த ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பயங்கரவாத குழுக்களை அழிப்பதற்காக உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நேட்டோ படையினர் ஈராக்கில் உள்ள ராணுவத்தளங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த படையினரை குறிவைத்து போராளி குழுவினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள பேஷ்மயா என்ற பகுதியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கி இருக்கும் ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று இரண்டு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


    Next Story
    ×