என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு
Byமாலை மலர்19 Feb 2020 6:45 AM GMT (Updated: 19 Feb 2020 6:45 AM GMT)
ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டோக்கியோ:
சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் இந்நோய் பரவி வருகிறது. எனவே அங்கு பொதுமக்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துறைமுக நகரமான கோபேயில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போயின. அங்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் முகமூடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 4 பெட்டிகளில் இருந்த முகமூடிகளை காணவில்லை. அவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் முகமூடி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி திருடப்பட்ட முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்க அவை திருடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் இந்நோய் பரவி வருகிறது. எனவே அங்கு பொதுமக்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துறைமுக நகரமான கோபேயில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போயின. அங்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் முகமூடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 4 பெட்டிகளில் இருந்த முகமூடிகளை காணவில்லை. அவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் முகமூடி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி திருடப்பட்ட முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்க அவை திருடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X