என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் - பரவும் கொரோனா வைரஸ்... அச்சத்தில் உலக நாடுகள்
Byமாலை மலர்25 Jan 2020 11:45 AM GMT (Updated: 25 Jan 2020 11:45 AM GMT)
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது ஆஸ்திரோலியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி:
சீனாவில் உள்ள வுகான் மாகணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவும் இந்த கொரோனோ வைரசுக்கு சீனாவில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரசுக்கு 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியை சேர்ந்த சேர்ந்த 3 பேருக்கும், மெல்போர்னை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அமெரிக்கா நாட்டின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்த 60 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிவந்த அந்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கியா கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவிவருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X