என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள்
Byமாலை மலர்5 Dec 2019 2:21 AM GMT (Updated: 5 Dec 2019 9:45 AM GMT)
ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.
பெர்லின்
ஐரோப்பிய தமிழர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘லிண்டன்’ அருங்காட்சியக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷிணி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
ஐரோப்பிய தமிழர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘லிண்டன்’ அருங்காட்சியக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷிணி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X