search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளுவர் சிலை"

    • கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
    • நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை-பொள்ளாச்சி சாலையில் குறிச்சி கிழக்கு கரைப்பகுதியில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதநாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என தலா 15 அடி உயரத்தில் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பைர் பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் அருகே திறந்தவெளி அரங்கம் போல பொதுமக்கள் நின்று பார்க்கும் வகையில் செல்பி பாய்ண்ட் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜல்லிக்கட்டு காளை, பொங்கல் பானை, தலையாட்டி பொம்மை, நடனமாடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது, சக்கரம் ஆகிய கட்டமைப்புகளும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மறுபுறம் உள்ள குறிச்சி சின்னக்குளத்தில், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துகளை கொண்டு பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    25 அடி உயரத்தில் 25 அடி நீளம் 15 அடி அகலத்தில் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று இதனை திறந்து வைத்தார்.

    இதேபோல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் 48 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் 7,800 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகும். இந்த நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகளுக்கு ஏற்ற நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்கள் படிக்க தேவையான நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலகத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அதேபோல கோவை பெரியகுளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் என்ற பொழுது போக்கு கட்டமைப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    • திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.
    • திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.

    கன்னியாகுமரி :

    தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தனிப்படகில் சென்றார். அங்கு வந்த அவரை பள்ளி மாணவிகள் வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவள்ளுவர் சிலையின் கால்பாதம் வரை ஏறி சென்று பார்வையிட்டார். அங்கு விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.

    கீழ்தளத்தில் உள்ள அறப்பீடமண்டபத்தில் எழுதப்பட்டிருந்த சில முக்கியமான திருக்குறளை படித்து மகிழ்ந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
    • கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தென்ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

    இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 157-வது சிலையை தென்ஆப்பிக்கா நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் டாக்டர் மிக்கி செட்டி தலைமையில் கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் பெருந்தமிழன் மாஸ்டர் ஹீகான் மெர்வின் ரெட்டி முன்னிலையில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
    • இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நாளை (2-ந்தேதி) தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

    இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இவ்விழாவில் நேரில் பங்கேற்பதற்காக டா்பன் நகருக்கு சென்று மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ. சத்யா, துர்கா சத்யா ஆகியோரும், மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் மிக்கி செட்டி, கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் மாஸ்டர் ஹூகான் மெர்லின் ரெட்டி மற்றும் தமிழ்ச் சங்க செயல்பாட்டினர் ராஜராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை

    கன்னியாகுமரி :

    76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்கி ழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரி கடல் நடு வில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர கன்னியாகுமரி கட லோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரை பகுதியில் போலீசார் தீவி ரமாக கண்காணித்து வரு கிறார்கள். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    • சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
    • சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

    புதுச்சேரி:

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.

    தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது.

    இந்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.

    வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தப்படுகிறது.

    சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

    தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

    தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். ஏராளமான இந்திய வம்சாவளியினரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தை கேட்கும் போது நான் சொந்த மண்ணில் நிற்பது போல் உணர்கிறேன். நான் பல முறை பிரான்ஸ் வந்துள்ளேன். ஆனால் இந்த முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

    இன்று உலகம் புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ளது. இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் பணி தொடங்கி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

    பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவையே உற்றுப்பார்க்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விட மாட்டோம். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக விட மாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது.

    எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என தீர்மானித்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் யு.பி.ஐ. பேமெண்ட் முறையை பயன்படுத்த இந்தியாவும், பிரான்சும் ஒப்புக்கொண்டு உள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப்பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

    ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து மேலே கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறி இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பியாவின் மக்கள் தெகையை விட அதிகமாகும்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப்பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு உண்டு.

    பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

    100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததும் அங்கு இருந்து இந்திய வம்சாவளியினர் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள திருவள்ளுவர் சிலையை புதுவையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்து உள்ளார். இந்த சிலை வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் 600 கிலோ எடை யில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரீஸ் அருகே செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.

    பாரீசில் இன்று பிரமாண்ட தேசிய தினவிழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார், அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அணி வகுப்பினை பார்வையிடுகின்றனர்.

    இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும் பிரான்ஸ் விமாப்படையுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் இந்த தேசிய தின விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

    இந்த நிகழ்ந்சி முடிந்ததும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

    மேலும் பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மலே கான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
    • 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த 2 படகுகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச சவாரி செய்யும் வகையில் இன்று முதல் இயக்கப்பட்டுஉள்ளது. இந்த படகுகளில் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுஉள்ளது.

    இதில் குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையேரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் பாலம் அமைக்கும்பணி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

    இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறைகளின் தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கண்ணாடி கூண்டு பாலப்பணியின் தொடக்க விழா இன்று காலை விவேகானந்தர் பாறையில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக விவேகானந்தர் பாறையில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக் டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு நாளை அடிக்கல் நாட்டுகிறார்
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி :

    நாட்டின் தென்கோடி யான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்ப டுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடு களில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப் பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற் கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24-ந்தேதி) நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்ப தற்காக அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்
    • சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்த ளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதி யாக குளம்போல் காட்சி யளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக கன்னியாகு மரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்கியது. அதன்பிறகு 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்துவந்தனர்.

    முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    ×