என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கி ஊசலாடிய விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி
Byமாலை மலர்25 Nov 2019 11:27 AM GMT (Updated: 25 Nov 2019 11:27 AM GMT)
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்ததில் உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூயார்க்:
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தை சேர்ந்தவர் தாமஸ் காஸ்கோவிச் (வயது 65). இவர் பைபெர் கப் எனும் தனது சிறிய வகை விமானத்தை நேற்று ஓட்டிச்சென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் ஸ்காட் கவுண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து தாறுமாறாக அங்குமிங்குமாக பறந்த விமானம் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
‘அவரச எண்ணான 911 க்கு அழைப்பு வந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மின்னழுத்த கம்பிகளில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விமானி எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டார்’, என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X