என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
Byமாலை மலர்24 Nov 2019 4:57 AM GMT (Updated: 24 Nov 2019 4:57 AM GMT)
சிரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியா நாட்டின் டெல் அப்யாட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில், கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X