என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 12-ம் தேதி தேர்தல்
Byமாலை மலர்30 Oct 2019 9:11 AM GMT (Updated: 30 Oct 2019 9:11 AM GMT)
பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவுக்கு ஆதரவாக 438 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
லண்டன்:
பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுச்சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகள் உள்ளன. பொதுச்சபையில் 650 எம்.பி.க்கள் பிரபுக்கள் சபையில் 788 எம்.பி.க்கள் என மொத்தம் 1,438 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரிட்டன் ராணியின் ஒப்புதலுடன் கடந்த 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பாராளுமன்றத்துக்கு முந்தையை தேர்தல் நடத்தப்பட்ட நாளில் இருந்து ஐந்தாவது ஆண்டில் வரும் கடைசி மே மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் மறுமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும், பிரதமர் விரும்பினால் அதற்கு எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த இந்த சட்டத்தில் அனுமதி உண்டு.
அவ்வகையில், முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தெரசா மே எடுத்த முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஆதரவாக 522 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
இதை தொடர்ந்து 8-6-2017 அன்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தெரசா மே மீண்டும் பிரதமரானார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24-7-2019 அன்று ராஜினாமா செய்தார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்பதால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக பாராளுமன்ற பொதுச்சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடந்த வாக்கெடுப்பில் முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 438 எம்.பி.க்களும் எதிராக 20 எம்.பி.க்களும் வாக்களித்தனர். டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தனது கட்சி எம்.பி.க்களிடையே பேசிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் பிரதமருமான போரிஸ் ஜான்சன், ‘பிரெக்சிட்டை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரமிது. இது மிகவும் கடினமான தேர்தலாக இருக்கும். நம்மால் இயன்றதை சிறப்பாக செய்து முடிப்போம்’ என குறிப்பிட்டார்.
தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பின், ‘நமதுநாடு இதுவரை காணாத வகையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் வரும் தேர்தலில் எங்களது பிரசாரம் மிக தீவிரமாக அமையும்’ என தெரிவித்தார்.
1923-ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டுதான் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது என்ற நிலையில் பாராளுமன்ற பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பிரபுக்கள் சபையும் ஒப்புதல் அளித்தால் திட்டமிட்டபடி டிசம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுச்சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகள் உள்ளன. பொதுச்சபையில் 650 எம்.பி.க்கள் பிரபுக்கள் சபையில் 788 எம்.பி.க்கள் என மொத்தம் 1,438 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரிட்டன் ராணியின் ஒப்புதலுடன் கடந்த 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பாராளுமன்றத்துக்கு முந்தையை தேர்தல் நடத்தப்பட்ட நாளில் இருந்து ஐந்தாவது ஆண்டில் வரும் கடைசி மே மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் மறுமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும், பிரதமர் விரும்பினால் அதற்கு எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த இந்த சட்டத்தில் அனுமதி உண்டு.
அவ்வகையில், முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தெரசா மே எடுத்த முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஆதரவாக 522 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
இதை தொடர்ந்து 8-6-2017 அன்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தெரசா மே மீண்டும் பிரதமரானார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24-7-2019 அன்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தற்போதைய பிரதமர் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால் எரிச்சலடைந்த போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்பதால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக பாராளுமன்ற பொதுச்சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடந்த வாக்கெடுப்பில் முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 438 எம்.பி.க்களும் எதிராக 20 எம்.பி.க்களும் வாக்களித்தனர். டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தனது கட்சி எம்.பி.க்களிடையே பேசிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் பிரதமருமான போரிஸ் ஜான்சன், ‘பிரெக்சிட்டை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரமிது. இது மிகவும் கடினமான தேர்தலாக இருக்கும். நம்மால் இயன்றதை சிறப்பாக செய்து முடிப்போம்’ என குறிப்பிட்டார்.
தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பின், ‘நமதுநாடு இதுவரை காணாத வகையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் வரும் தேர்தலில் எங்களது பிரசாரம் மிக தீவிரமாக அமையும்’ என தெரிவித்தார்.
1923-ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டுதான் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது என்ற நிலையில் பாராளுமன்ற பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பிரபுக்கள் சபையும் ஒப்புதல் அளித்தால் திட்டமிட்டபடி டிசம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X