என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எகிப்தில் விமானத்தை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்25 Sep 2019 6:22 AM GMT (Updated: 25 Sep 2019 6:22 AM GMT)
எகிப்தில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு விமானத்தை கடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கெய்ரோ:
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் சைபுதீன் முஸ்தப்பா. இவர் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை 72 பயணிகளுடன் சைப்ரஸ் நாட்டிற்கு கடத்தி கொண்டு சென்றார். வெடிபொருட்கள் வைத்திருப்பதாக விமானியை மிரட்டி சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்கனா நகரில் விமானத்தை தரையிறக்க செய்தார். பின்பு அவரது முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் சிறிது நேரத்தில் பயணிகள் அனைவரையும் விடுவித்தார்.
இதையடுத்து சைப்ரஸ் நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எகிப்து நாட்டில், அலெக்சாண்ட்ரியா குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
விசாரணையில் அவர் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் எனவும் அந்த இயக்கத்தின் கொள்கைகளை பரப்ப முற்பட்டதும் நிரூபணமானது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எகிப்து நாட்டில் ஆயுள் தண்டனை காலம் 25 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X