search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் கடத்தல்"

    இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக இன்று வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #hijackcall #AirIndiahijacka #BCAS
    மும்பை:

    மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.

    விமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.



    விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
     
    விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #hijackcall #AirIndiahijacka #BCAS #CISFtightensecurity 
    ×