என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்
Byமாலை மலர்15 Sep 2019 1:33 PM GMT (Updated: 15 Sep 2019 1:33 PM GMT)
துபாயில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதியர் மற்றும் அவர்களின் 8 மாத கைக்குழந்தை கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வயது பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
மஸ்கட்:
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஓமன் நாட்டின் தோபார் மாகாணத்தில் உள்ள சலாலா என்ற நகரத்தில் இருந்து கவுசுல்லா அமஜ்த்துல்லா கான் குடும்பத்தாருடன் காரில் துபாய் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறிய அவரது கார் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கவுசுல்லா அம்ஜத்துல்லா கான் அவரது மனைவி ஆயிஷா சித்திக்கா, பிறந்து எட்டு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஹம்சா கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எதிர் வாகனத்தில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் உயிர்தப்பிய கவுசுல்லா அம்ஜத்துல்லா கான் தம்பதியரின் மூன்று வயது பெண் குழந்தை ஹனியா சித்திக்கா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மஸ்கட் நகரில் உள்ள கவ்லா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X