search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian couple"

    • வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).

    இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.

    அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.

    தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்திய தம்பதி விசு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்றனர்.



    அப்போது அவர்கள் 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்தனர். கணவன்-மனைவி இருவரும் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ படம் எடுத்தபோது உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இந்த உண்மை தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills 
    ×