என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஹாமாசை புரட்டிப்போட்ட டொரியன் புயல் - 7 பேர் பலி
Byமாலை மலர்4 Sep 2019 6:08 AM GMT (Updated: 4 Sep 2019 6:08 AM GMT)
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் பஹாமாஸ் நாட்டை தாக்கியதில் 7 பேர் பலியாகினர்
மெக்சிகோ:
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களை தாக்கியது. இதனால் கடும் மழையும் காற்றும் சுழன்றடித்ததால் அப்பகுதிகளில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டொரியன் புயல் கரையை கடக்கும் மற்றும் பஹாமாஸ் நாட்டின் பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளது எனவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதனால் புளோரிடா, ஜியார்ஜியா மாநிலங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சக்திவாய்ந்த டொரியன் புயல் பஹாமாஸ் நாட்டை நேற்று தாக்கியது. கடுமையான காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. இந்த புயல் மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் மின்னிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, டொரியன் புயல் வடக்கு நோக்கி அமெரிக்காவின் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X