என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினர் மற்றும் தலிபான்களிடையே நடந்த மோதலில் 14 பேர் பலி
Byமாலை மலர்27 Aug 2019 4:44 PM GMT (Updated: 27 Aug 2019 4:44 PM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ சோதனைச்சாவடியை குறிவைத்து தலிபான் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு ஜவ்ஜன் மாகாணத்தின் பைசாபாத் மாவட்டத்திற்குட்ட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதை சற்றும் எதிர் பாராத பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவத்தில் 11 அரசுப்படை வீரர்களும் 3 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 14 காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X