என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
Byமாலை மலர்16 Aug 2019 12:05 PM GMT (Updated: 16 Aug 2019 12:05 PM GMT)
அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைகழகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அலபாமா:
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அலபாமா மாகாணம் அமைந்துள்ளது. அம்மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி நகரில் அலபாமா மாநில பல்கலைக்கழகம் உள்ளது.
இன்று அப்பல்கலைக்கழகத்திற்கு அருகில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக்கொண்டு அப்பகுதியில் இருந்த மக்கள் மீது சரமாரியாக சுட்டார். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்துக்கொண்டு ஒடினர்.
இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 நபர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X