search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
    X
    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்

    ஏமனில் அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - ராணுவ வீரர்கள் 19 பேர் பலி

    ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.
    சனா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுதவிர, சமீபகாலமாக இங்கு மீண்டும் தலையெடுத்து வரும் அல் கொய்தா பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்துகின்றனர்.
     
    இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்யான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமை குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    Next Story
    ×