என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்16 July 2019 7:18 PM GMT (Updated: 16 July 2019 7:18 PM GMT)
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
நியூயார்க்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி, அடவ் மார்ன்யங், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் அதீத மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதோடு, விமான ஊழியர்களை தாக்கி, ஆபாசமாக நடந்துகொண்டார். இது தொடர்பாக அடவ் மார்ன்யங் மீது வழக்கு தொடரப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அடவ் மார்ன்யங் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அவர் மதுபோதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறி வருத்தம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு மற்றும் குடிபோதையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி, அடவ் மார்ன்யங், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் அதீத மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதோடு, விமான ஊழியர்களை தாக்கி, ஆபாசமாக நடந்துகொண்டார். இது தொடர்பாக அடவ் மார்ன்யங் மீது வழக்கு தொடரப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அடவ் மார்ன்யங் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அவர் மதுபோதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறி வருத்தம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு மற்றும் குடிபோதையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X