என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் சேதம்
Byமாலை மலர்16 July 2019 5:04 AM GMT (Updated: 16 July 2019 5:04 AM GMT)
இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.
மாஸ்கோ:
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு பெருமளவிலான சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலைடியல் பாலி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்காரில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடிளில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியேறினர். ஒருசில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
லம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X