என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு திடீர் ரத்து
Byமாலை மலர்14 Jun 2019 1:10 PM GMT (Updated: 14 Jun 2019 1:10 PM GMT)
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இன்று பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்தானது.
பிஷ்கெக்:
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மாலை கிர்கிஸ்தான் நாட்டு அரசின் சார்பில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெக்கோவ் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியா-கிர்கிஸ்தான் தொழிலதிபர்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இதற்கிடையில், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு விருந்து நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X