என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்
Byமாலை மலர்11 Jun 2019 5:54 AM GMT (Updated: 11 Jun 2019 6:53 AM GMT)
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டன்:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட ரசிகர்கள் "திருடன்" எனக்கூறி கூச்சலிட்டனர்.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்ற மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட ரசிகர்கள் "திருடன்" எனக்கூறி கூச்சலிட்டனர்.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்ற மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய மல்லையாவை ரசிகர்கள் சிலர் முற்றுகையிட்டு ‘திருடன்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம் அவரை பிடித்திருப்பதாக ஒரு சிலர் கூச்சலிட்டனர். தொடர்ந்து சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து பாதுகாவலர்கள் உதவியுடன் மல்லையா அங்கிருந்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X