search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச யோகா தினம் - சுரிநாம் நாட்டில் யோகா பயிற்சி மேற்கொண்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X

    சர்வதேச யோகா தினம் - சுரிநாம் நாட்டில் யோகா பயிற்சி மேற்கொண்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுரிநாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #PresidentofIndia #RamNathKovind

    பரமாரிபோ:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

    வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபர் டிசயர் டெலானோ பவுடர்சே உடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்தார். #InternationalYogaDay2018 #PresidentofIndia #RamnathKovind
    Next Story
    ×