என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
Byமாலை மலர்18 Jun 2018 1:43 PM GMT (Updated: 18 Jun 2018 1:43 PM GMT)
ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். #internationalyogaday
கேன்பெர்ரா:
ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம் துவங்கப்பட்டது மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் அதிஅற்புத சக்தியாக உருவாகி வரும் இந்தியாவுடன் இந்த யோகா கலைக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் கலை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவது சிறப்பான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமூக நலனுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்களின் மன உளைச்சலை சரிசெய்ய யோகா உதவும் என ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக பேசிய வாசுதேவ் கிரியா யோகா அமைப்பின் தலைவர், உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் பாராளுமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இதே நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி விக்டோரியன் பாராளுமன்றத்திலும் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். #internationalyogaday
ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம் துவங்கப்பட்டது மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் அதிஅற்புத சக்தியாக உருவாகி வரும் இந்தியாவுடன் இந்த யோகா கலைக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் கலை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவது சிறப்பான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமூக நலனுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்களின் மன உளைச்சலை சரிசெய்ய யோகா உதவும் என ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக பேசிய வாசுதேவ் கிரியா யோகா அமைப்பின் தலைவர், உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் பாராளுமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இதே நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி விக்டோரியன் பாராளுமன்றத்திலும் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். #internationalyogaday
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X