என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 11 பேர் பலி
Byமாலை மலர்24 April 2018 10:30 AM GMT (Updated: 24 April 2018 10:30 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghan
காபுல்:
தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
அந்நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில் சோதனைச்சாவடி மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கஸ்னி மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது நடந்த தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.
மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சோத்னைச்சாவடியில் இரு போலீசாரை சுட்டுக்கொன்ற தலிபான் பயங்கரவாதிகள் 6 போலீசாரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
அந்நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில் சோதனைச்சாவடி மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கஸ்னி மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது நடந்த தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.
மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சோத்னைச்சாவடியில் இரு போலீசாரை சுட்டுக்கொன்ற தலிபான் பயங்கரவாதிகள் 6 போலீசாரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X