என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

    இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

    படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    • கென் கருணாஸ் நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
    • படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

    இந்நிலையில் 'யூத்' என்ற படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பறந்தேனே' வெளியாகி உள்ளது. இதனை கென் கருணாஸ் பாடியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான முட்ட கலக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், இப்பாடலையும் பாராட்டி வருகின்றனர்.  


    • முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
    • இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் அடித்தனர்.

    இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய கர்நாடகா அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.

    இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.

    • டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.
    • வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது.

    அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரம் உள்ளது. இங்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    ரினி சம்பத் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

    ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இவர், மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

    அதில் வெற்றி பெற்றால், ஜனநாயக கட்சி சார்பில் மேயர் தேர்தல் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.

    வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால், உட்கட்சி தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

    ரினி சம்பத் ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 15,000 டாலர்களுக்கும் மேலாக நிதி திரட்டியுள்ளார். 

    • நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
    • நானும் என் குடும்பத்தினரும் உங்கள் அனைவருக்கும் எங்களது கடமையையும், சேவையையும் தொடர்ந்து செய்வோம்

    பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இன்று அவர் கைது செய்யபட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆண்ட்ரூவின் சகோதரரும், பிரிட்டன் மன்னருமான சார்லஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    "ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகம் குறித்த செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த கவலை அடைந்தேன். இந்த விவகாரத்தை தகுந்த முறையில் மற்றும் தகுந்த அதிகாரிகளால் விசாரிப்பதற்கான முழுமையான, நியாயமான மற்றும் முறையான வழிமுறைகள் இனி தொடரும்.



    இதில், நான் முன்பே கூறியது போல, அவர்களுக்கு எங்களது முழுமையான மற்றும் மனப்பூர்வமான ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு. நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இந்த செயல்முறை தொடரும் வேளையில், இந்த விவகாரம் குறித்து நான் மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இதற்கிடையில், நானும் என் குடும்பத்தினரும் உங்கள் அனைவருக்கும் எங்களது கடமையையும், சேவையையும் தொடர்ந்து செய்வோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்த 16-வது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக Cochlear Implant அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்வில் அவர் பேசுகையில், தொடர்ந்து பேசிய அவர், " நீண்ட காலமாக என்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை.

    அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும். இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருகிறேன். அதுபோல கேட்கும் திறன் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து அவர் பேசியுள்ளது கவனம் பெற்று வருகிறது.

    மம்மூட்டி தற்போது மோகன்லாலுடன் இணைந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'பேட்ரியாட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார்.

    • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
    • இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு உட்கொள்ள வேண்டும்.

    தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை' சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்கக் கோளாறுகளுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த மையத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இத்திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றார்.

    உறங்கும் நேரத்தில் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய தூக்கத்துடன் தொடர்புடைய கோளாறுகளுக்கு இந்த தூக்கவியல் சிகிச்சை மையம் சிறப்பு சிகிச்சையை வழங்குகிறது. காது-மூக்கு-தொண்டை (ENT) நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு உலகளவில் சிறந்த தரநிலைகளுடன் CPAP, BiPAP போன்ற நவீன சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கிறது. மிகத் துல்லியமான, வலியற்ற மற்றும் இரத்தம் வராத எண்டோஸ்கோபி, பிளாஸ்மா அடிப்படையிலான மற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் சிகிச்சை (RF) வழிமுறைகளும் இதில் உள்ளடங்கும்.



     


    இங்குள்ள பிரத்யேக 'தூக்க ஆய்வகத்தில்', தூக்கத்தின் போது மூளைச் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு நிகழ்நேர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. குறட்டை உட்பட உறக்க பிரச்சனைகள், உடலியக்கவியல், மூளையின் செயல்பாடு மற்றும் இதய இரத்தநாள ஆரோக்கியம் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், DISE எனும் நவீன தொழில்நுட்பம் மூலம், மயக்கவியல் மருத்துவரின் ஆதரவோடு நோயாளிக்கு உறக்க நிலையைத் தூண்டி சுவாசப் பாதையில் எங்கு அடைப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

    விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏற்படும் தூக்க நேர மாற்றத்தைச் சரி செய்வற்கான சிறப்பு செயல்திட்டத்தையும், உறக்கத்தின் போது திடீரென மூச்சு நின்றுவிடும் பிரச்சனைக்கு சிகிச்சையையும் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனையையும் (CBT) இந்த மையம் வழங்குகிறது.

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்நிகழ்வில் பேசுகையில், "குறட்டை விடுவது இயல்பானதாக தெரிந்தாலும், நோய் பாதிப்புக்கான இடர்வாய்ப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் அது இருக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதுடன், தம்பதியினர் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தூங்குவது போன்ற பிரிவிற்கும் வழிவகுக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் உறக்கவியல் சிகிச்சைக்கான இந்த புதிய மையம், உடல்நலத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளையும் காக்க உதவும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.



    இந்த மையத்தின் குறிக்கோள் குறித்து டாக்டர் ரவி பச்சமுத்து கூறியதாவது: "இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் தூக்கக் கோளாறுகளை கண்டறிவதிலும், சரியான சிகிச்சை அளிக்கும் முறையையும் இந்த மையம் மாற்றியமைத்துள்ளது. நோயாளிகள் வெவ்வேறு மருத்துவ துறைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே இடத்தில் தூக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வுகள் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களையும் இம்மையம் கொண்டிருக்கிறது". என தெரிவித்தார். 

    மையத்தின் இயக்குநர் டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு கூறியதாவது: "இரவு நேரத்தில் வரும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பெரும்பாலும் தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது. புகைப்பிடிப்பது எப்படிப் புற்றுநோயை உண்டாக்குமோ, அதேபோல் சிகிச்சையளிக்கப்படாத தூக்கக் கோளாறுகள் இதய நோய்க்கும் வழிவகுக்கும். இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு 'வழிகாட்டி' நியமிக்கப்பட்டு, பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை நோயாளிகளுக்குத் துணையாக இருப்பார்கள்." என தெரிவித்தார். 

    • பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது
    • கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைப்பு

    இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 

    அதாவது, பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது; அது 'பாலியல் வன்கொடுமை முயற்சி' மட்டுமே என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நடந்த ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    மருத்துவ சான்றுகள் உயிர் பிழைத்த பெண்ணின் கன்னித்திரை சேதமடையாமல் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்தும், பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததாலும், உள்நுழைவு நடந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் படி ஒரு செயலை பாலியல் வன்கொடுமை என்று உறுதி செய்ய உள்நுழைவு நடந்திருந்தால் மட்டுமே, மிகச் சிறிய அளவிலான உள்நுழைவு இருந்தாலும் அது வன்கொடுமையாகக் கருதப்படும், ஆனால் உள்நுழைவு இல்லாத நிலையில் அதை வன்கொடுமை எனக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.
    • பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மீதான வழக்கில் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

    இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைத் திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிபதி ஜீ குய்-யோன் தனது தீர்ப்பில் கூறினார்.

    ஏற்கனவே அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
    • டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

    இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  


    • இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கருத்து

    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவர் தற்போது வசித்து வரும் நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து 'தேம்ஸ் வேலி'  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' போன்ற அரசப் பட்டங்களை மன்னர் சார்லஸ் கடந்த 2025-ஆம் ஆண்டே பறித்துவிட்டார்.

    இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.  "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    "விசாரணையின் ஒரு பகுதியாக, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், நார்போக் பகுதியைச் சேர்ந்த 60-களில் இருக்கும் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக்கில் உள்ள முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    தேசிய வழிகாட்டுதல்களின்படி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், நீதிமன்ற அவமதிப்பைத் தவிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    உதவி தலைமை காவல்துறை அதிகாரி ஆலிவர் ரைட் கூறியதாவது:

    "முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு, அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இந்தக் குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்போது, எங்களது விசாரணையின் நேர்மையையும், நடுநிலைமையையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் மிகுந்த ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; இது குறித்த புதிய தகவல்களை தகுந்த நேரத்தில் வழங்குவோம்" என தெரிவித்தார். 

    ×