என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
- இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், "எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது" என்று தெரிவித்தார். டிரம்ப் - எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர்.
சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடினர். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் நட்பு துளிர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்.
- பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா.
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. இதனால் வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா என கூறியுள்ளார்.
- இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 148 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840
18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-09-2025- ஒரு கிராம் ரூ.145
20-09-2025- ஒரு கிராம் ரூ.145
19-09-2025- ஒரு கிராம் ரூ.143
18-09-2025- ஒரு கிராம் ரூ.141
17-09-2025- ஒரு கிராம் ரூ.142
- காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு.
- வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
- அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி - தெற்காசிய திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்கும் சீனா
இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.
H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் 1 முதல் K-விசா நடைமுறைக்கு வருகிறது.
- அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
- வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது.
அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியை கொண்டாட உங்களுக்கான சில பயனுள்ள குறிப்புகளை பார்ப்போம்...
* கொலு பொம்மைகளை பெட்டியிலிருந்து எடுத்து தூசி தட்டி, சிறுதுண்டு பஞ்சில், கெரசின் விட்டு ஒற்றியெடுத்து சுத்தம் செய்து விபூதி தடவி துடைத்துவிட்டால், புதிய பொம்மை போல் 'பளிச்'சென்று இருக்கும்.
* கொலுவில் மலைகள் அமைத்த பின், அவற்றின் மேல் சிறிதளவு பஞ்சை மேலிருந்து கீழாக ஒட்டி வைத்தால், தள்ளி நின்று பார்க்கும்போது மலையில் இருந்து அருவி கொட்டுவது போல் இருக்கும்.
* விதவிதமான மெட்டீரியலில் எவ்வளவு பொம்மைகள் வாங்கினாலும் மரப்பாச்சி பொம்மைகள் கட்டாயம் நம் வீட்டுக் கொலுவில் இடம்பெற வேண்டும்.
* நவராத்திரிக்கு கொலு பார்க்க வரும் பெண்களுக்கு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சவுந்தர்யலஹரி போன்ற சுலோக புத்தகங்களை கொடுக்கலாம்.
* ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை இதில் புகுத்தக்கூடாது. பாரபட்சமின்றி, அழைக்கப்படுகின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
* கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும், அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தை கடைபிடிக்கவும்தான் என்பதை உணர்ந்து வைக்க வேண்டும். வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர அது துணைபுரிய வேண்டும்.

* வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமையல் வேலை செய்வோரை கண்டிப்பாக கொலு பார்க்க அழைத்து மஞ்சள், குங்குமத்துடன் பணம் வைத்துக் கொடுங்கள்.
* வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால், குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமிகளை சுட்டிக்காட்டி, புராணக் கதைகள் சொல்ல வைக்கலாம்.
* இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலும், உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை மாலை நேரத்தில் நவீன உடைகளை தவிர்த்து, அழகாக பட்டுப் பாவாடை உடுத்தி, வளையல், பூ, பொட்டுடன் இருக்க வலியுறுத்துங்கள்.
* கொலு பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொடுத்து மனநிறைவுடன் மங்கலமாக அனுப்பி வையுங்கள்.
* மாலையில் தீபம் ஏற்றும் முன்பு திரி நூல்களை ஒரு மணி நேரம் முன்பே கட் செய்து, ஒரு கப்பில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவைத்து விட வேண்டும். பின் அகல் விளக்கில் அந்தத் திரிநூலை எடுத்து எண்ணெய் விட்டு ஏற்றினால் விளக்கு நன்றாக நின்று எரியும்.
* வேலைக்குப் போகும் பெண்களுக்கு தினமும் சுண்டல் செய்வது கஷ்டமாக இருக்கும். நவராத்திரி ஆரம்பிக்கும் முன் பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டால் சமயத்துக்கு உதவும்.
* நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
* கொலு சமயத்தில் மாலையில் வாங்கும் மல்லிகைப்பூ மறுதினத்துக்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து, அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக மணமுடன் இருக்கும்.
* நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. ஊசியை தொடக்கூடாது. ஊசி முனையில் அம்பாள் தவமிருப்பதாக ஐதீகம்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மாகாலனி, வெங்கடேஸ்வராநகர், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், செயலககாலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்ககாலனி, ராஜீவ்காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம்நகர், கந்தன்சாவடி, சந்தோஷ்நகர், பால்ராஜ்நகர், காந்திநகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோநகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, கவிந்தன்நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்காரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர்நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சி.எல்.ஆர்.ஐ.நகர், ரூகி காம்ப்ளக்ஸ்.
சேத்பட்: மெக்நிக்கல்ஸ் சாலை, நௌராஜி சாலை, குருசாமி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, முத்தையப்பா தெரு, அருணாச்சலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்ராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கமாடத் தெரு, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, சாஹிப் தெரு, தெற்கு கசரத் தோட்டம், வடக்கு அரச தோட்டம், வாசு தெரு, ராஜ ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியாள் தெரு, டெலிபோன் குவாட்டர்ஸ், போஸ்டல் குவாட்டர்ஸ், ஹைல்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆர்பிஐ குவாட்டர்ஸ், திருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு.
கல்லூரி சாலை: கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ, பைக்ராஃப்டி கார்டன் தெரு.
ஆழ்வார்திருநகர்: ஆர்.கே.நகர் பிரதான சாலை, இந்திராகாந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜிநகர், திருமலைநகர்.
தில்லைகங்காநகர்: ஆண்டாள்நகர் 1வது பிரதான சாலை, விரிவாக்கம், மற்றும் 1 முதல் 5 வது குறுக்கு தெரு, கிருஷ்ணராஜாநகர் 1 முதல் 4வது தெரு, மற்றும் விரிவாக்கம், பிருந்தாவன்நகர் 1 முதல் 7 வது தெரு மற்றும் விரிவாக்கம், நேதாஜி காலனி 1வது பிரதான சாலை மற்றும் 1, 2வது குறுக்கு தெரு, ரெயில்வே காலனி 5வது லேஅவுட், சதர்ன் செல்டர், நறுமுகை அபார்ட்மெண்ட்.
சின்மையாநகர்: சாய்நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன்நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோநகர், சாய்பாபா காலனி, ரத்னாநகர், தாராசந்த்நகர், எல் மற்றும் டி காலனி, சி.ஆர்.ஆர்.புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திராநகர், ராஜீவ்காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்திநகர், வாயுபுத்ரா தெரு, பாலாம்பால்நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜிநகர், எஸ்பிஐ காலனி, பிஏ. காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரிநகர்.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "முதலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry எனக் கூறாதீர்கள். இரு அணிகளும் 15-20 ஆட்டங்களில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என வெற்றி பெற்றிருந்தால் அப்படிச் சொல்லலாம்.ஆனால் 10-1 அல்லது 10-0 ஆக இருந்தால் அது எப்படி Rivalry ஆகும்? அதனால் இனிமேல் இது Rivalry-யே அல்ல" என்று கூறி சிரித்தார்.
- நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
- இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மேலும், நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் தூய்மை, அமைதி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
பக்தர்கள் ஆடை மட்டுமின்றி பூஜைக்கு வெள்ளை நிறங்களை கொண்ட மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
- சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் எளிதில் வீழ்த்தியது.
- இந்திய வீரர்கள் கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் எளிதில் வீழ்த்தியது.
இந்த போட்டின்போதும் டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. அதே போல் போட்டி முடிந்த பிறகு இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் கைக் குலுக்காமல் சென்றனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மிதுனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.
கடகம்
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அதிகாரிகள் உறுதுணைபுரிவர்.
சிம்மம்
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
கன்னி
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
துலாம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்
கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.
தனுசு
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும்.
மகரம்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.
கும்பம்
பகை அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.
மீனம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.






