என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Visas"

    • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
    • அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி - தெற்காசிய திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்கும் சீனா

    இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

    H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் 1 முதல் K-விசா நடைமுறைக்கு வருகிறது.

    • இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.
    • சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    1974-ன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.

    இந்தப் பயணத்தின் போது யாத்ரீகர்கள் வேறு வேறு இடங்களுக்கிடையில் பஞ்ச சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் செல்வார்கள்.

    இந்நிலையில், ஜூன் 8 முதல் 17-ம் தேதி வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர திருவிழாவிற்காக சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    குரு அர்ஜன் தேவ் தியாக தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் இந்த விசா வழங்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் 'யாத்ரீகர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களுக்கு நிறைவான யாத்திரை அமைய வாழ்த்துக்களையும்' உயர் கமிஷன் பொறுப்பாளர் அப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

    ×