என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
- திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளனர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சமாஜ்வாடியின் மாநிலங்களவை எம்பியான ராம் கோபால் யாதவ் கூறியதாவது:
மோசமான ஏற்பாடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். உணவு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
அங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். இப்போது மக்கள் பசியால் இறக்கின்றனர்.
பெட்ரோல், கார்களுக்கு டீசல் இல்லை. மக்களுக்கு உணவு இல்லை. தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உத்தர பிரதேச அரசு அலகாபாத்தை வாகனம் இல்லாத பகுதி ஆக்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி.யான ஹேமமாலினி பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளா ஒரு வெற்றி. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை. அனைவரும் நீராட விரும்புவதால் ஏராளமானோர் அங்கு செல்கின்றனர்.
இது மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் அதைப் பாராட்டுகிறார்கள். அங்கு சென்ற எனக்கு தெரிந்தவர்கள், மிக நன்றாக நிர்வகிக்கிறார்கள் என்கிறார்கள். விபத்து நடந்தது, ஆனால் கும்பமேளா தோல்வி அடைந்தது என அர்த்தமல்ல என தெரிவித்தார்.
- Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்க வேண்டிய நிதியில் ஒரு தவணை கூட விடுவிக்கப்படவில்லை.
- தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது கைவிடவேண்டும்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை.
போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்.
இவ்வாறு அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்பு ப்ராஜக்டிற்கான பின்னணி இசையை இன்று தொடங்கினேன். காட் பிளெஸ் யூ மற்றும் டயர் ஸ்டார்ட்ஸ் நவ்" என பதிவிட்டுள்ளார். இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை குறித்து தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
Started composing for the most special project today …. God Bless U ❤️? . Fire starts NOW ?
— G.V.Prakash Kumar (@gvprakash) February 11, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் டி20 அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தன.
- இந்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் உள்ளன.
கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்த, கொண்டிருக்கும் அந்த அணியால் இதுவரை ஐசிசி டிராபியை வெல்ல முடியவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் ஐசிசி டிராபி வறட்சியை தென்ஆப்பிரிக்கா முடிவுக்கு கொண்டு வரும் என தென்ஆப்பிரிக்காவின் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கிரோம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரேம் ஸ்மித் கூறியதாவது:-
2027 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே, ஐசிசி சாம்பியன் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூலமாக ஐசிசி டிராபிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2027 உலகக் கோப்பையை சொந்த மக்கள் முன் வென்றால், அது அற்புதமானதாக இருக்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் மைதானங்கள், ஆடுகளங்கள் மற்றும் கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறோம். இதனால் 2027 உலகக் கோப்பையை நடத்தும் நேரத்தில், அதை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருப்போம்.
இவ்வாறு கிரோம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. 2027 உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.
கடந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், இந்த வருட தொடக்கத்தில் பெண்களுக்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.
நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அதிமுகவிற்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.
இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார்.
- ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் வந்துகொண்டிருந்தது.
- படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய ஐதராபாத்தை சேர்த்த பக்தர்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8:30 மணியளவில் அவர்களது மினி பஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது.
அப்போது தவறான பாதையில் எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியுள்ளது. இதில் மினி பஸ்ஸில் வந்த பத்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலின் அப்டேட்டை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் சூர்யா சிறை சீறுடையில் இருக்கிறார். அவர் சிறைச்சாலையில் இருக்கும் போது இப்பாடல் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இது ஒரு சோக காதல் பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.
- குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அணிகளின் பட்டியல்:
1. தகவல் தொழில்நுட்ப பிரிவு
2. வழக்கறிஞர் பிரிவு
3. மீடியா பிரிவு
4. பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
5. பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு
6. உறுப்பினர் சேர்க்கை பிரிவு
7. காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
8. வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு
9. திருநங்கைகள் பிரிவு
10. மாற்றுத்திறனாளிகள் பிரிவு
11. இளைஞர்கள் பிரிவு
12. மாணவர்கள் பிரிவு
13. பெண்கள் பிரிவு
14 இளம் பெண்கள் பிரிவு
15. குழந்தைகள் பிரிவு
16. தொண்டர்கள் பிரிவு
17 வர்த்தகர் பிரிவு
18 மீனவர் பிரிவு
19: நெசவாளர் பிரிவு
20. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
21 தொழிலாளர் பிரிவு
22 தொழில்முனைவோர் பிரிவு
23. அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
24 மருத்துவர்கள் பிரிவு
25 விவசாயிகள் பிரிவு
26. கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
27. தன்னார்வலர்கள் பிரிவு
28. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
- அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பௌ பெற்று வருகிறது. டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு அடாவடியான கல்லூரி மாணவனின் கதை மற்றும் அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் காதல், நட்பு , சிக்கல் என டிரெய்லர் காட்சி அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது.
- பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,018 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஐந்த நாட்களும் சரிவில் முடிவடைந்த நிலையில் மொத்தம் சென்செக்ஸ் 2,290.21 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேற்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 77,311 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,384.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. மதியம் 12 மணிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இறுதியாக சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் சரிவை சந்தித்து 76,293.60
புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 77,387.28 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 76,030.59 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எல்&டி போன்ற பங்குகளும் சரிவை எதிர்கொண்டது. பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போன்று, இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் கடும் சரிவை எதிர்கொண்டது. நேற்றைய வர்த்தகம் 23,381.60 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 23,383.55 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22,986.65 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,390.05 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில், இறுதியாக நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
திங்கட்கிழமை அமெரிக்க மார்க்கெட் உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய மார்க்கெட்டுகளான ஷாங்காய், ஹாங்காங் போன்றவை சரிவை சந்தித்தன. சியோல் மார்க்கெட் க்ரீனில் முடிவடைந்தது. ஐரோப்பாவின் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் சரிவை சந்தித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 76.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.
பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.






