என் மலர்
நீங்கள் தேடியது "bhutan"
- இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- பூடான் மன்னருடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார்.
இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.
பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்
- பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
புதுடெல்லி:
அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் சேர்ந்து இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்கிறார். மேலும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
இதைப்போல பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்கிறார்.
பிரதமரின் பயணம் இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- மேற்கு வங்கத்தில் இருந்து பூடானின் சம்ட்சே நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
- அசாம் மாநிலத்தில் இருந்து கெலேபூ நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 89 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டுள்ளன என மத்திய ரெயில்வேத்துறை அமை்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பனார்ஹட்- பூடானில் உள்ள சம்ட்சே நகரை இணைக்கும் வகையிலும், அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹர்- பூடானின் கெலேபூ நகரை இணைக்கும் வகையிலும் ரெயில்பாதை அமைய இருக்கிறது.
இந்தியாவும் பூடானும் விதிவிலக்கான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. என மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி பூடான் சென்றிருந்தார். அப்போது இந்த ரெயில்பாதைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை.
- 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை.
நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு இனி பாஸ்போர்ட், விசா தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இந்தியா வருபவர்களுக்கு நேபாளம், பூடான் குடியுரிமை சான்றிதழ், அல்லது அந்நாட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முக்கியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை என்றும், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
- பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி அன்று பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "" பூடானுக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். மாட்சிமை பொருந்திய பூடான் அரசர், நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவும் பூடானும் தூதரக ரீதியான நட்புறவு கொண்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜுலை 5-ம் தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணமாக பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது டாஷோ ஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை சந்தித்து டோக்லாம் எல்லைப்பிரச்சனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரையும் பூடான் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BhutanPM






