என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 16-ந்தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 17-ந்தேதி 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 18-ந்தேதி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காட்ஸ்ஜில்லா படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் "காட்ஸ்ஜில்லா" திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு "ரோம்-காம்" வகையாகும். இப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்,  மற்றும் பலர் நடிக்கின்றனர்.இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது "காட்ஸ்ஜில்லா" திரைப்படம்.

    சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற "பிளாக் மெயில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான "ரோம் காம்" படமான "காட்ஸ் ஜில்லா" படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ்.

     

    பூஜை விழாவில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.

    கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்ப குழு விவரம்:ஒளிப்பதிவு – சிவராஜ்படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த்இசை – கார்த்திக் ஹர்ஷாகலை இயக்கம் – சௌரப் கேசவ்தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

    • ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:- அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது.

    கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.

    நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.

    முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.

    இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து திருப்பூர் வந்த சனோஜ் குமார் கூறுகையில், நான் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது தங்கியிருப்பவர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கொரோனாவின் போது இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. வேலை இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பூரை விட்டு வெளியேறினர். அமெரிக்க வரி விதிப்பால் தற்போது, நாங்கள் 40 சதவீத வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு கூட வேலை இல்லாததால், எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் திருப்பூருக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் கட்டுமானப் பணிகளுக்கு மாறியுள்ளனர் என்றார்.

    அமெரிக்க வரி பாதிப்பு திருப்பூர் பனியன் தொழிலை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இது குறித்து செல்போன் கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் திருப்பூர் வந்த போது வெறுங்கையுடன் வந்தேன். அணிந்திருந்த ஆடைகள் மட்டுமே இருந்தன. நான் முதலில் ஒரு உதவியாளராக பணியை தொடங்கினேன், தேநீர் வாங்குவது, கார்களை சுத்தம் செய்வது மற்றும் நிறுவனங்களில் பிற வேலைகளை செய்தேன். பல ஆண்டுகளாக வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது திருப்பூரில் 3 செல்போன் உதிரிபாகங்கள் கடைகளை நடத்தி வருகிறேன்.அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.இதனால் வர்த்தகமும் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.

    திருப்பூரில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வாரத்திற்கு பணம் அனுப்புவார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
    • 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கை கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

    சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    * ஆக.9-ந்தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது.

    * 2026 வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    * பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

    * அன்புமணிதான் பா.ம.க. தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    * பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * பா.ம.க. அன்புமணி தலைமையில் உள்ள இயக்கம் தான் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வழக்கறிஞர் பாலுவின் அறிவிப்பை தொடர்ந்து பா.ம.க.வினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பா.ம.க.வினர் கொண்டாடினர்.

    ராமதாசின் நோக்கத்தை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். அனைவரும் அன்புமணி தலைமையிலான பா.ம.க.விற்கு வாருங்கள் என ராமதாஸ் அணியில் உள்ளவர்களுக்கு பாலு அழைப்பு விடுத்துள்ளார்

    • சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது.

    இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் லண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

    மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சந்திர நாகமல்லையா (வயது50) என்பவர் கொடூரமாக கொல்லப் பட்டார்.
    • சந்திர நாகமல்லையா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.

    அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் டல்லாசில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திர நாகமல்லையா (வயது50) என்பவர் கொடூரமாக கொல்லப் பட்டார்.

    மனைவி மற்றும் மகன் கண்முன் சக உணவக ஊழியர் யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் என்பவர் அவரை அரிவாளால் தலையை துண்டித்து கொன்றார்.

    பின்னர் அந்த தலையை தரையில் பந்து போல உருட்டி சென்று அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். கொலையுண்ட சந்திர நாகமல்லையா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.

    இந்த கொலை சம்பவம் அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து ட்ரூத் சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டல்லாசில் சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவை சேர்ந்த சட்ட விரோத குடியேறியால் மனைவி மற்றும் மகன் முன்னிலையில் இந்த மதிப்புமிக்க தலைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

    இது காட்டுமிராண்டி தனமானது. நம் நாட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்க கூடாது. இத்தகைய நபரை நாட்டில் அனுமதிக்க கூடாது.

    கைதான குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக முன்பு கைது செய்யப்பட்ட கியூபாவை சேர்ந்த இந்த நபர் திறனற்ற ஜோபைடன் ஆட்சியில் நம் தாய் நாட்டில் விடுவிக்கப் பட்டார்.

    இது போன்ற சட்ட விரோத குடியேறி குற்றவாளி மீது எனது நிர்வாகம் மென்மையாக இருக்காது. தேசிய பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம், அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி உள்பட என்னுடைய நிர்வாகத்தில் உள்ள பலர் அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக மாற்றும் பணியில் அற்புதமான வேலை செய்து வருகின்ற னர்.

    போலீஸ் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

    இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

    17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்

    இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் வெளி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட பணிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.

    இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    தனுஷ் அதில் வெறுப்பாளர்களை பற்றி சில வார்த்தைகள் கூறினார் அதில் "ஹேட்டர்ஸ் என்ற ஒரு கான்சப்ட் இல்லை, அது ஒரு 30 நபர்கள் பிழைப்பிற்காக 300 போலி ஐடி-களில் இருந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இங்கு யாரும் யாருக்கும் ஹேட்டர்ஸ் கிடையாது அந்த 30 நபர்களும் எல்லா திரைப்படங்களும் பார்ப்பார்கள். அன்பு கொடுத்தால் திருப்பி அன்பு கொடுப்போம் அன்பின் எழுச்சி தான் எல்லாமே!" என கூறினார்.

    • அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.
    • பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.

    சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.

    * செங்கோட்டையனும் நானும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    * தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.

    * அ.தி.மு.க. சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர்

    "என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இடம் பார்க்க இங்கு வந்தேன். தனுஷ் சாரின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்" என மிகவும் நகைச்சுவையாக கூறினார்.

    • அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.
    • எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?

    பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாமானிய மக்களின் எழுச்சித்தான் திராவிட இயக்கம்.

    * அரசியல் என்பது மக்களுக்கான பணி, கடுமையான பணி. இங்கு சொகுசுக்கு இடமில்லை.

    * அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.

    * கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம்.

    * கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கினோம்.

    * அன்புக்கரங்கள் திட்ட நிகழ்வில் பேசிய குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவிற்கு நாங்கள் செய்யும் மரியாதை.

    * மக்களுடன் மக்களாக எப்போதும் இருப்பதால்தான் அனைவருக்குமான தேவைகளை செய்ய முடிகிறது.

    * எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?

    * காலை உணவுத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலா?

    * கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது வாக்கு அரசியலா?

    * அன்புக்கரங்கள் திட்டத்தில் 6,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×