என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
    • கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.

    சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-

    13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.

    எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.

    இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார். 

    • கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
    • கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சி முகாமும் டெல்லியில் நடக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. அடுத்து விழுங்க போக இருக்கிற கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி பழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம்.

    அ.தி.மு.க. கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18-ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    பா.ம.க.வை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சினைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அதுபோல் எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.

    நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேசவிட மாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்க்ள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது.
    • தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    உலகெங்கும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்த பின்பு இந்தியாவிலும் காதலர் தினத்தை இளசுகள் வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.

    காதலர்கள் பலரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மலைம மாவட்டமான நீலகிரியில் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள விடுதிகளில் தற்போது முன்பதிவுகளும் தொடங்கி விட்டது.

    அவ்வாறு வரும் காதலர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலிகளுக்கு தங்களது காதலிகளுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.

    அத்துடன் பல்வேறு விதமான ரோஜா மலர்கள், கொய்மலர்களையும் தங்களது காதலிகளுக்கு பரிசாக வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேசமயம் கொய்மலர்கள் நீலகிரியிலேயே தாராளமாக கிடைக்கிறது. இதனால் அதனை வாங்கி பலரும் பரிசாக கொடுக்க தொடங்கி விட்டனர். வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே மலர்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

    சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதேபோன்று கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உள்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிகளை காண முடியும்.

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார்.
    • இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி, பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் இருந்து ¼ கிலோ கஞ்சா மற்றும் சிகரெட்டுகள், பணத்தை வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்தார். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார். இது தொடர்பாக இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி மாணவரிடம் கஞ்சா எப்படி வந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். மாணவ சமுதாயத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் எனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.

    சாலை சரியில்லை என கேட்கிறார்கள். சாலை அமைத்து கொடுத்தால் வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள், அதனால் விபத்து நடக்கிறது. அதில், இறந்து போய் விடுகிறார்கள். உடல் நிலைதான் முக்கியம். 2026-2031 ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும், நீங்கள் மீண்டும் முதல்வராக வருவீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன். செயல்படுபவர் தான் அமைச்சராக இருக்க வேண்டும்.

    ஏன் என்றால் என்னுடைய துறையில் 108 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. நிர்வாகத்தில் பல விதம் உள்ளன. வளர்ந்து வந்த இயக்கமாக தி.மு.க. உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா, சொன்னால் கோபித்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் கூட்டணியில் உள்ளார்கள்.

    காங்கிரசில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். சிறு துளி, பெருவெள்ளம் என்பது போல, வளர்ந்து வந்த கட்சிதான் தி.மு.க., கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? இந்த தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்பதை செய்து கொடுப்போம். திராவிட இயக்கத்தை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.

    நேற்றுமுன்தினம் கூட நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம், போய் நிற்கிறோம்.

    எந்த கூட்டணி என்றாலும் சரிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. தனியாக நிற்கவேண்டும் என்றாலும் ரெடி. ப.சிதம்பரம் ஜெயித்த வழக்கு என்னாச்சு என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். ப.சிதம்பரமும் தற்போது நண்பராகி விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை நாளை ரெயில் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.

    முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 3-வது நாள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்கிறது. 10 ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
    • தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில், சேலத்தில் விஜய் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "5 மணி நேரம், 6 மணி நேரம் தளபதிக்காக நிப்போமா?..தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது, ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவா, நீங்கதான் அவன பாத்துக்கணும். நமக்கு முக்கியம்" என்று பேசியுள்ளார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
    • தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை கட்சியை விட்டு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நீக்கினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகியை நீக்கும் அளவுக்கு சசிகலா - தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஆதரவாளர்கள் அனைவரும் தனது இல்லத்திற்கு வருமாறு சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வரும் சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களை குறிவைத்து சசிகலா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறீர்களா? என ஆதரவாளர்களிடம் சசிகலா கேட்டு வருவதாகவும், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது.

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
    • முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது.

    ரெயில்களில் சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செல்போன் செயலி வருகிற 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று டிக்கெட் எடுக்கவும், வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்தது. தற்போது அனைத்தும் செல்போனில் இருந்தபடி மேற்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நவீன தொழில்நுட்பம் ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரங்கள் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர் யூ.டி.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி வந் தது. பயணம் செய்யும் ரெயில் எந்த ரெயில் நிலையத்தில் உள்ளது. எங்கு வந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்காக என்.டி.இ.எஸ். என்று சொல்லப்படும் தேசிய ரெயில் விசாரணை சேவை இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான புகார்கள் குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் புகார் அளிக்கும் நிலை இருந்தது. தற்போது ரெயில் மதாத் எனப்படும் இணைய தளம், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.

    தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அந்த சேவையையும் பெற முடியும். இவ்வாறாக பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், குறைகளை பதிவு செய்ய, புகார் தெரிவிக்க, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண டிக்கெட் ஆகிய அனைத்து சேவைகளும் ரெயில் ஒன் என்ற செயலி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ-சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும். படிப்படியாக மேற்கொள்ளப் டும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும்.

    ஆர்-வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரெயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரெயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×