என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
    • அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.

    இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

    • வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார்.
    • மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    திமுக அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். 

    இந்நிலையில் இன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான்.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள், எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள்.

    நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகத் தரக்குறைவான நடத்தையைக் கண்டு பெருமை கொள்கிறது!! நாங்கள் அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை காங்கிரஸ் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதிக்காமல் இருந்திருந்தால், நிலவரம் அங்கு மோசமான காட்சியாக மாறியிருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது." என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில் இந்த வீடியோவை மறுபகிர்வு செய்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    "அன்பார்ந்த கிரண் ரிஜ்ஜுஜு அவர்களே வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அது நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டதல்ல என்றாலும், அது எங்கள் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், பெண்கள் எம்.பி.க்களாகிய நாங்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு, ஆளுங்கட்சியினருடன் அமைதியாக உரையாடியதை தெளிவாக காண முடிகிறது. இதற்குப் பயந்தே பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை என்று நீங்கள் சொல்வது பிரதமரின் பயத்தையும், பலவீனத்தையுமே காட்டுகிறது.

    நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. வன்முறையிலும் ஈடுபடவில்லை. "எதிர்பாராத சம்பவம் திட்டமிடப்பட்டது" என்ற பொய்யான குற்றச்சாட்டையும், பிரதமரை தாக்க முயன்றதாக பெண்கள் எம்.பி.க்கள் மீது பரப்பப்பட்ட அரசுக்கு ஆதரவான ஊடக கதைகளையும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யென நிரூபிக்கிறது. அந்த பொய் கதை இப்போது முழுமையாக உடைந்துவிட்டது.

    இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான். தேசிய பாதுகாப்பு குறைபாடுகள், எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமரின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.

    நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள். எந்த மிரட்டலும், எந்த பொய்யான கதையும் எங்களை மௌனமாக்க முடியாது. மேலும், பாராளுமன்றத்தின் மரியாதை மற்றும் புனிதம் குறித்த தங்கள் தீடீர் அக்கறைக்கு நன்றி. உங்கள் அபாரமான நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!

    எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதற்கு மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது.
    • இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படும் பேராசிரியை நிகிதா வரும் மார்ச் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 9.5 சவரன் நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

    இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் நிகிதாவை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.  

    • நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம்.
    • டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.

    தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோடங்கள், 

    "கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி கவலைகொள்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நவம்பர் மாதம் காங்கிரஸ், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாட்கள் ஆகிறது. நாங்கள் குழு அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விரைவாக அவர்கள் குழு அமைப்பார்கள், உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள், எத்தனை இடங்கள், எந்த இடங்களில் நாங்கள் போட்டியிடப் போகிறோம் என்பது தெளிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இருக்கிறோம்.

    ஆனால் தற்போது வரை குழு அமைக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கோபமாக உள்ளனர். ஏன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். நாங்கள் தாமதிப்பது போல் தெரிகிறது. நாங்கள் தாமதிக்கவில்லை. தொடர்ந்து முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. மாநிலத்தலைவர் சொன்னதுபோல இது வருத்தமளிக்கிறது. தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. எங்களுக்கு போதுமான நேரம் தேவை. பேச்சுவார்த்தை  தற்போதுவரை தொடங்கப்படாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை." என தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம். கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டோம். மேலும் விளக்கினோம் ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என விரும்பினோம்." என தெரிவித்தார். 

    பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்தார். 

    • பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக வந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை.
    • சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த ஆண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் சாக்லேட் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அந்த பாக்கெட்டுகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பயணியிடம் இருந்து 9.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 9.5 கோடி ரூபாய் ஆகும். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி
    • எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார்.

    தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர்,

    "முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் அவர்தான் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்தவரை அந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியவில்லை. இன்று, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறேன். எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதுபோல தொடர்ந்து பல இடங்களில் விஜய்யை புரட்சித்தளபதி எனக்கூறி வருகிறார். இந்நிலையில் விஜய்யை செங்கோட்டையன் இவ்வாறு அழைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "இதுகுறித்து நான் கண்ணீர்தான் விடவேண்டும். எங்களுடன் இருந்த ஒரு பெரியமனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டாரே என்று கண்ணீர்தான் விடவேண்டும். எல்லோருக்கும் ஒரு தகுதி இருக்கும். எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார். அப்பொழுதும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை தாழ்ந்து விட்டது" என தெரிவித்துள்ளார். 

    • கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து கோம்பைபட்டி கிராமத்தை அப்பகுதி மக்களிடம் கருத்தை கேட்காமல் வருவாய்த்துறையினர் பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைத்தனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் கோம்பைபட்டி கிராமத்தை இணைக்க கூடாது. கோம்பைபட்டி ஊராட்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து துண்டு பிரசுரங்களையும் கிராம மக்கள் வழங்கி வருவதுடன் தங்கள் கிராமத்தில் பதாகைகளையும் வைத்துள்ளனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள்.
    • கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான்.

    "தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை பாஜகவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம் என தேமுதிக குறித்து கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பது உறுதியாகியுள்ளது. 

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு தொடர்பான கேள்விக்கு,

    "விபி-ஜி ராம்-ஜி என்பது கிராம்பபுற வேலைவாய்ப்பு திட்டம் என்பதன் தமிழ் அர்த்தம்தான். அப்படி இல்லையெனில் இந்தி தெரிந்தவர்களிடம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." என பதிலளித்தார். 

    தொடர்ந்து தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,

    "தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்

    பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. யார் பேசினாலும் எங்களுடன்தானே கூட்டணி. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். பாஜக அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தே.ஜ. கூட்டணிக்குதானே வருவார்கள்" என பதிலளித்தார்.

    சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்." என தெரிவித்தார். 

    தேர்தல் அறிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 

    "நாடு முழுவதும் ஆயிரம் கட்சிகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம். கடந்த தேர்தலில் மகளிருக்கு ரூ.1500 தருகிறோம் எனக்கூறினோம், திமுக ரூ.1000 தருவதாக கூறியது. அது எடுபட்டுவிட்டது. அதனால்தான் இந்த முறை ரூ.2000 என முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். வேண்டுமானால் நீங்களும் (திமுக) அறிவித்துக்கொள்ளுங்கள்.

    மத்திய அரசு, மற்ற அமைப்புகள், எங்களது தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான். பாஜக அகில இந்திய கட்சி. அதிமுக தலைமையில் இயங்குகிறோம் என சொல்லிவிட்டார்கள்." என தெரிவித்தார்.

    • மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?
    • தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

    நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது "மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" என்றார்.

    மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை போன்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பினார்.

    • கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    • கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல.

    மாநிலங்களவையில் கமல் ஹாசன் பேசியதற்கு திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தது குறித்து கேள்விக்கு கஸ்தூரி அளித்த பதில் பின்வருமாறு:-

    கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல. புரிஞ்சிருந்தால் வரவேற்று சரி என சொல்லமாட்டாங்க. அவர்களுக்கு பெரியாரையும் தெரியல. கமலையும் தெரியல. என்ன பேசினார் என்றும் தெரியல. குருட்டுப்போக்குல எதுக்கும் இருக்கட்டும் என சொம்பு மட்டும் தூக்கி முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. அதுதான் உண்மை.

    தெலுங்கில் பிச்சை எடுத்த தியாகராஜர் எனச் சொல்லி தெலுங்கு பாசையையும், தெலுங்கு மொழியை அவமானப்படுத்திதான் பேச்சை ஆரம்பித்தார் கமல்.

    தெலுங்கு மக்களை பேசியதாக பொய்யா கஸ்தூரி மேல இந்த அரசுக்கு வழக்குப் போடத் தெரியுது. தியாகராஜர் தெலுங்கில் பிச்சை எடுத்தார் என்ற கமலை பாராட்ட தெரியுது.

    இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.

    முன்னதாக,

    மாநிலங்களவை எம்.பி.யான கமல் ஹாசன், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையை கடந்த 4-ந்தேதி தொடங்கினார். தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

    தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது. இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.

    • பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்.
    • ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.

    இதனால் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது SIR பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பின் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.

    இந்த நிலையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய 6 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ×