என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கன்னியாகுமரியில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

    நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * கன்னியாகுமரியில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * கன்னியாகுமரியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    * வளையாற்றில் இருந்து கன்னியாகுமரிக்கு நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம்

    * ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

    * முளகுமூடு தேவாலயம் ரூ.2 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.

    * களியக்காவிளை - கன்னியாகுமரி சாலை ரூ.9 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும்.

    • நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை அவர் திறந்து வைத்தார். பின்னர் புத்தளம் அருகே கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் தனித்துவமான மாவட்டமான கன்னியாகுமரி இந்திய துணை கண்டத்தின் தொடக்கம்.

    * இந்திய துணை கண்டத்தின் தொடக்கமான குமரிக்கு வந்திருக்கிறேன்.

    * கன்னியாகுமரியில் 61,500 சதுர அடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

    * இஸ்ரோவுக்கு பல்வேறு விஞ்ஞானிகளை தந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன்.

    * மார்ஷல் நேசமணியின் போர்ப்படை தளபதியான விளங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார்.

    * முக்கடல் சூழ்ந்த குமரியில் முப்பால் கண்ட வள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன்.

    * கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.4,260 கோடியில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 7 பாலங்களை கட்டி உள்ளோம்.

    * தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    * குமரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும்.
    • ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அடையாளமாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.

    இந்த காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் காலை நேர ரம்மியத்துக்கும் ஒரு அபூர்வ காட்சியை வழங்குகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போல பரவி நிற்கும் வெள்ளை நாரைகள், கண்களை ஈர்க்கும் சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. அந்த பகுதியில் இயற்கையாக உருவான சதுப்பு நிலங்களும், ஈர புல்வெளிகளும் அவைகளின் வாழ்வாதார முகாமாக மாறியுள்ளன.

    மேலும் கூட்டமாக இரை தேடும் நாரைகள் தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடும் காட்சி, பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வரும் இந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவையே.

    இமயமலை, விந்திய மலைத்தொடர் மற்றும் சத்பூரா மலைத்தொடர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு பயணித்து, கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வந்தடைகின்றன.

    ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் இந்த நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பின்னர் அவை மீண்டும் தங்கள் பழைய வாழிடங்களை நோக்கி பறந்து செல்கின்றன.

    ஊட்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 'கிக்கியூ' புல்வெளி பகுதிகளில் புழு-பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக்கி கொள்ளும் இந்த நாரைகள், சதுப்பு நிலங்களில் மெதுவாக சுழன்று, தரையை உற்று நோக்கி உணவுத் தேடும் காட்சி, இயற்கையின் ஒழுங்கை உணர்த்துவதாக அமைந்து உள்ளது.

    "சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமா இந்த ஊட்டி சொந்தம்? நாங்களும் சுற்றுலாவாகத்தான் இங்கு வந்து தேனிலவு கொண்டாடுகிறோம்" என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளை நாரைகள், அதிகாலை நேரங்களை சினேகமாக்கும் இயற்கை நண்பர்களாக உள்ளன.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டி இருக்கும். இந்த நிலையில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி சுற்றுலா பயணிகளின் கேமராவில் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் மனங்களிலும், இந்த பருவகால பறவைகளின் பரவச முகாமிடல் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன. 

    • மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிது.

    கடந்த சில நாட்களாக திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வந்ததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே சென்றதாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட 900 கன அடி முற்றிலும் நிறுத்தப்பட்டது. மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது. வரத்து 340 கன அடி. இருப்பு 1070 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடி. வரத்து 32 கன அடி. திறப்பு 433 கனஅடி. இருப்பு 2123 மி.கன அடி.

    தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வைகை அணை 13.6, போடி 4.6, ஆண்டிபட்டி 2.6, அரண்மனைபுதூர் 2.4, கூடலூர் 1 என மாவட்டத்தில் 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
    • பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.

    இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.

    ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.

    இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.

    அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும், நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    • மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம்.

    தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி.சி.டி.என்.எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய இயலும்.

    மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவைகளை ஆன்லைனில் உடனடியாக நீதிமன்றத்துக்கும் அனுப்ப முடியும். பொதுமக்கள் ஆன்லைனில் புகாரினைப் பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆன்லைன் புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். இந்த புதிய மென்பொருள் சேவையை போன்று டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு என்ற அமைப்பும் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

    • பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்.
    • மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.

    போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக NDA கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை முறையில் பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நல்லகண்ணு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • யே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனுடையே நல்லகண்ணு காலமானார் என்று இணையத்தில் நேற்று இரவு தகவல் பரவின. அந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை யாரும் எதையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
    • நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை.

    ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-

    1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ஆர். உடல் வந்த பிறகு மலர் வளையம் வையுங்கள் எனக்கூறினர். அதன்படிதான் ஜெயலலிதா மலர் வளையம் வைத்தார்.

    அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு துணையாக இருந்த சிலர் ஜெயலலிதாவை கீழே தள்ளினர். அப்போது நான் தான், ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன்.

    அப்போதுதான், நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.

    'அரசியல் எனக்கு வேண்டாம். அனைவரும் என்னை கேவலப்படுத்துகின்றனர்' என்று ஜெயலலிதாகூறினார்.

    உடனே, "உங்களை சீண்டியவர்களை சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும்" எனக்கூறி அரசியலில் தொடர வைத்தேன். அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றினார்.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறி வந்தது. வீட்டிற்கு அழைத்து வர நல்ல நாள் பார்த்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மறைவு குறித்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.

    'நான் தான் கொன்றேன்' என பலரும் கூறினர். ஜெயலலிதா மறைந்த பிறகு அன்றைய தினம் இரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் என்னிடம் வந்து, நீங்கள்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினர். இந்த நிகழ்வு அனைத்தும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் வைத்துதான் நடந்தது.

    அப்போது, நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. சகோதரியாகத்தான் பழகினேன். எனக்கு அந்த பதவி தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக இருக்கட்டும் என கூறினேன்.

    மற்ற அமைச்சர்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் என்றேன். இடையில் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையனை நீக்கியிருந்தார்கள். அவரை மட்டும் சேர்க்க வேண்டும் என சொன்னேன். அதன்படி இரவோடு இரவாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்றார். 

    • நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    மாங்காடு: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலந்தீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி, நியூ காமாட்சி நகர்.

    ×