என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா?
    • இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது.

    திருச்சி மாநில மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

    தனித்துவத்தோடு இருக்கிறோம்.. தனித்து உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம்.

    வியாபாரம் தேவையில்லை. வேண்டியது அரசியல் விடுதலைதான். மொழி அழிந்தால் நாடு அழியும்.

    இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா?

    பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்துக்காக நிற்கிறோம். நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம்.

    அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்.

    இங்கே அரசியல் என்பது தேர்தலுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கான அரசியல் இல்லை.

    இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது. ஆனால் சேவை அரசியல், செயல் அரசியல் இல்லை.

    ஐந்தாயிரத்தை வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறியணும்.

    இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லோகேஷ் தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
    • இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்

    முன்னாள் சபாநாயகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார்.

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3வது இடம் பெற்றிருந்தார்.

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்தார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டி.
    • எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவர் நாதக சார்பில் போட்டியிடுகின்றார்.

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட மாநாட்டில் 117 பெண்- 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.

    அதன்படி, கும்மிடிப்பூண்டி- வழக்கறிஞர் தர், பொன்னேரி- பொறியாளர் ராஜாத்தி திருத்தணி- முனைவர் சந்திரன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.

    ஆர்கே நகர்- வெண்ணிலா தாயுமானவன், பெரம்பூர்- வெற்றித்தமிழன், கொளத்தூர்- வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் லூடர் சேத் போட்டியிடுகின்றனர்.

    இயக்குனர் மு.களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.

    வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரவாயல்-ரேவதி, அம்பத்தூர்-சிலம்பரசன், மாதவரம்-கிருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர்-சத்யா பாஸ்கர்.

    அண்ணாநகர்- வழக்கறிஞர் சங்கர், விருகம்பாக்கம்-சந்தோஷ், சைதாப்பேட்டை-வித்யா, தி நகர்-அனுஷா விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அணைக்கட்டு- ரவிகுமார், கீழ்வைத்தியனாங்குப்பம்- கலையேந்திரி, குடியாத்தம்- இமலன் ஆகியோர் நாதக சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 சதவீதம் வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலிலும் சீமான் களம்காண்கிறார்.

    வாணியம்பாடி- முருகேசன், ஆம்பூர்- அப்சியா தௌபிக் பிக்ரத், ஜோலார்பேட்டை- சசி ரேகா, வந்தவாசி- கணேஷ், செஞ்சசி-கிருஷ்ணன், மயிலம்- விஜய் விக்ரம், திண்டிவனம்- பேச்சிமுத்து, ஏற்காடு- பழனிச்சாமி, ஓமலூர்- சிவசக்தி, சங்ககிரி- நித்யா அருண், சேலம் மேற்கு- சுரேஷ் குமார், மொடக்குறிச்சி- அருண், பெருந்துறை- லோகு, பவானி- மேனகாதேவி, அந்தியூர்- ஆனந்தி, சூலூர்- ராஜசேகர், கவுண்டம்பாளையம்- கலாமணி, கோவை வடக்கு- நர்மதா, தொண்டாமுத்தூர்- ரஜ்புநிஷா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    திருச்சி கிழக்கு- கிருஷ்ணசாமி, திருவெறும்பூர்- ஜல்லிக்கட்டு ராஜேஷ், லால்குடி- மதன், திட்டக்குடி-மகாலட்சுமி, விருத்தாசலம்- ஆனந்தி, நெய்வேலி- வீரமணி, பண்ருட்டி- பானுப்பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    வில்லிவாக்கம்- திருநங்கை ரோஷினி, திருவிக நகர்- பொறியாளர் ஜெகதீஷ் சந்தர், எழும்பூர்-சரண்யா, தாம்பரம்- தமிழ்ச்செல்வி, செங்கல்பட்டும்- அமுதா நம்பியானர், திரும்போரூர்-அம்பேத் ராஜன், செய்யூர்- சுவாதி லட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
    • மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.

    மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!

    மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.

    மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.

    மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளததை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி யான தி.மு.க. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு மாநாடுகள், தேர்தல் சந்திப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    தி.மு.க. சார்பில் தொடர்ந்து தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, தாம்பரம், திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்கள், விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.

    மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வருகை தந்த முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றியதாவது:-

    வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மதுரை, சாப்பாடு என்றால் மதுரை, இங்கு எல்லாமே பேமஸ் தான் சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன், இனி நாமதான், எப்போதுமே நாமதான்!

    கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இந்த மாநாடுகள் எல்லாம் "வெறும் ட்ரெய்லர்தான்; மெயின் பிக்சர் திருச்சியில் இருக்கிறது".

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. "ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்!"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
    • அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.

    • சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
    • மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.

    மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பான் மாப்பிள்ளைக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் நடைபெற்ற சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது.

    மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இருவரும் மதங்களைக் கடந்து சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    • சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில் சாஸ்திரி நகரில் மாநகராட்சியின் மூலதன நிதியில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களால் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.

    முன்னதாக, இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் செந்தில் குமரன், கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகியுள்ளது. இது காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.

    இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    23ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே நேற்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து அம்பத்தூரில் இன்று மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்தில் நாளை (22-ந்தேதி) மாலை 4 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகிறார்.

    அதன்பிறகு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
    • திருவள்ளுவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×