search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆனந்தம், நிம்மதி எனும் புதிய ஒளிபெருகும் புத்தாண்டாக 2024-ம் ஆண்டு மலரட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
    X

    ஆனந்தம், நிம்மதி எனும் புதிய ஒளிபெருகும் புத்தாண்டாக 2024-ம் ஆண்டு மலரட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

    • 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.
    • புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.

    ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம்.

    இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    கே.எஸ்.அழகிரி:-

    பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஜி.கே.வாசன்:-

    2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.

    நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெறவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மத்திய, மாநில அரசுகளும், பொது மக்களும் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

    வைகோ:-

    மலரப் போகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது.

    இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம்.

    டாக்டர் ராமதாஸ்:-

    நாம் கடந்து வந்த கரடு முரடான பாதைகள் முடிவுக்கு வந்துவிட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024-ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.... அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

    அன்புமணி ராமதாஸ்:-

    தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும்.

    கமல்ஹாசன்

    பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.

    பால் தினகரன்

    "நாம் கடந்து வந்த துன்பங்கள் துயரங்கள், பாடுகள் பாரங்கள், கவலைகள், கண்ணீர், வேதனைகள், சோதனைகள், நாசங்கள், மோசங்கள் என்ற பழைய இருள் எல்லாம் மறைந்து, நன்மை, ஆனந்தம், நிம்மதி, சமாதானம் என்னும் புதிய ஒளி பெருகும் ஆண்டாக, 2024 திகழ்ந்திடட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், டாக்டர் பால் தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக முத்தையா மாரியப்பன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், தேசிய முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் சிவா, இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் ரவி பச்ச முத்து, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தர கர்கள் சங்க தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் நல சங்க பொதுச் செயலாளர் டாக்டர் அய்யப்பன், ஹஜ் அசோசி யேஷன் தலைவர் பிரசி டெண்ட் அபுபக்கர், நமது உரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மனாபன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணிஅரசன் ஆகியோர் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×