search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் எடுக்கும் முடிவைத்தான் கவர்னர் செயல்படுத்த முடியும்- டி.ஆர்.பாலு பேச்சு
    X

    முதலமைச்சர் எடுக்கும் முடிவைத்தான் கவர்னர் செயல்படுத்த முடியும்- டி.ஆர்.பாலு பேச்சு

    • பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
    • 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் கொரட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, நடிகர் நாசர், நக்கீரன் கோபால், பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி பேசுகையில், பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கே சரியில்லை. அங்கு மந்திரி வீட்டுக்கே பாதுகாப்பு கிடையாது. இன்றைய தினமும் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் தலித் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வீடு இல்லாத மக்கள் உட்பட பலர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இது போன்ற மிக மிக மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் நாட்டில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை ஒரு வார்த்தை கூட அது பற்றி கூறவில்லை.

    15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த போது உள்துறை அமைச்சர் இது புகைப்படத்திற்காக மட்டும்தான் என்று கிண்டல் செய்கிறார். எந்த அளவு தைரியம் இருந்தால் இப்படி பேசுவார்கள். அவருக்கு நாவடக்கம் தேவை. 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம். 50 ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைவனாக இருந்த ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் ஒன்று கூடி என்ன முடிவு செய்கிறார்களோ அதைத்தான் கவர்னர் பின்பற்ற வேண்டும். அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் நான்கு மணி நேரம் கூட அவர்களால் ஒரு நிலையில் இருக்க முடிய வில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும் என்று நினைக்க வேண்டாம் முன் கூட்டியே டிசம்பர் மாதத்தில் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்றார். கூட்டத்தில் ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ, மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி. எஸ். பி. ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×