search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 640 சிறப்பு பஸ்கள்
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 640 சிறப்பு பஸ்கள்

    • பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், முக்கியமான பண்டிகைகள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையானது சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களோடு இணைந்து வருகிறது.

    எனவே, பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×