search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
    • கனமழையால் தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் தூத்துக்குடி, விருதுநகர், தேனி, நீலகிரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஏற்கனவே நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×