search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்கட்சி தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ந்தேதி ஆலோசனை
    X

    உள்கட்சி தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ந்தேதி ஆலோசனை

    • கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.
    • தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருக்கும் நிலையில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகிறார்.

    தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. உயர்மட்ட உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு உள்கட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

    Next Story
    ×