என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
உள்கட்சி தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ந்தேதி ஆலோசனை
- கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.
- தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருக்கும் நிலையில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார்.
கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகிறார்.
தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. உயர்மட்ட உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு உள்கட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்