என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஏ.டி.எம். கொள்ளையர்கள் சதி திட்டத்தை தீட்டியது எப்படி?- கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை
- கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
- கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மேவாட் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகிய 2 பேரை அந்த மாநில போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்.
கொள்ளையடிக்க எப்படி சதி திட்டம் தீட்டினர், கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் அவர்கள் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்