search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட பல்வேறு படைப்பிரிவினருக்கு கேடயங்களை வழங்கிய மு.க. ஸ்டாலின்
    X

    குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட பல்வேறு படைப்பிரிவினருக்கு கேடயங்களை வழங்கிய மு.க. ஸ்டாலின்

    • தலைமைச் செயலகத்தில் இன்று கேடயங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
    • குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் இவ்வாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில் சிறப்பாக செயல்பட்ட இராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப்பிரிவு, தேசிய மாணவர் படைப்பிரிவு, சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கும், குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.

    இந்நிகழ்வின் போது, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், துணைச் செயலாளர் மரு. எஸ். அனு, ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×