search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • தமிழக அரசு மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
    • நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றாலும் நெல் மூட்டைகள் இன்னும் முழுமையாக கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது.

    எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு கொடுத்தும், நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் மூட்டைகளை பாதுகாத்து, கொள்முதல் செய்து, உரிய விலையை கொடுத்தும் விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×