search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புயல் பாதிப்புக்கு பின் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடக்கம்
    X

    புயல் பாதிப்புக்கு பின் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடக்கம்

    • புயலின் தாக்கத்தால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை தொடங்கியது.

    சென்னை:

    மிச்சாங் புயலின் தாக்கத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், சொந்த ஊருக்கு செல்ல முடியாத பயணிகள் ரெயில் நிலையங்களிலே தஞ்சம் அடைந்தனர்.

    இந்தநிலையில், மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை நேற்று மாலை தொடங்கியது. சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட்டது.

    Next Story
    ×