search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
    X

    ஐந்தருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

    குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஐந்தருவி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அருவி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று ஐந்தருவி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து பாட்டில்கள், டீ கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×