search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் விழா: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    கிறிஸ்துமஸ் விழா: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டங்களிலும் பனிமயமாதா உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அப்போது எங்களது இதயம் பெத்லகேமில் உள்ளது. பயனற்ற போர் காரணமாக அமைதியின் அரசர் மீண்டும் ஒருமுறை புறக்கணிப்பட்டுள்ளார்" என்றார்.

    Next Story
    ×