search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை எழும்பூர்-தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்னை எழும்பூர்-தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • அதிவிரைவு சிறப்பு ரெயில் 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×