search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முருகன், நளினி
    X
    முருகன், நளினி

    முருகனுக்கு பரோல் கேட்கும் நளினி- உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

    தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நளினி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தற்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார்.

    இந்நிலையில், தனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை . 

    மருத்துவக் காரணங்களுக்காக எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26-ம் தேதி நானும், மே 21-ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். 

    அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது கணவர் முருகன் 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு நளினி தனது மனுவில் கோரியிருந்தார். 

    நளினி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வருகிறது.

    Next Story
    ×