என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஊட்டி அருகே பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்22 May 2022 6:41 AM GMT (Updated: 22 May 2022 8:47 AM GMT)
தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய இசை முழங்க நடனமாடினர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.
ஊட்டி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 19ந் தேதி மாலை ஊட்டிக்கு வந்தார். 20ந் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட அவர், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் ஊட்டி அருகே உள்ள சோலூருக்கு பயணமானார்.
பின்னர் ஊட்டி கூடலூர் சாலையில் அமைந்துள்ள பகல்கோடு மத்து என்ற பழங்குடியின கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அவருக்கு அங்கு வசித்த பொதுமக்கள் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடையான பூத்துக்குல்லியை வழங்கினர். மேலும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை முழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அந்த பகுதியில் இருந்த தோடர் இன மக்களின் கோவிலுக்கு சென்று அந்த கோவிலையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய இசை முழங்க நடனமாடினர். அப்போது அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 19ந் தேதி மாலை ஊட்டிக்கு வந்தார். 20ந் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட அவர், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் ஊட்டி அருகே உள்ள சோலூருக்கு பயணமானார்.
பின்னர் ஊட்டி கூடலூர் சாலையில் அமைந்துள்ள பகல்கோடு மத்து என்ற பழங்குடியின கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அவருக்கு அங்கு வசித்த பொதுமக்கள் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடையான பூத்துக்குல்லியை வழங்கினர். மேலும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை முழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அந்த பகுதியில் இருந்த தோடர் இன மக்களின் கோவிலுக்கு சென்று அந்த கோவிலையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய இசை முழங்க நடனமாடினர். அப்போது அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.
பின்னர் அவர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மக்களிடம் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டார். மேலும் இந்த பகுதியில் எருமைகள் உற்பத்தி ஆராய்ச்சி மையம் தொடங்குவது தொடர்பாக அந்த பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையும் படியுங்கள்...எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணியை பிரதமர் மோடி 26ந் தேதி தொடங்கி வைக்கிறார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X