என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்
Byமாலை மலர்18 May 2022 8:21 PM GMT (Updated: 18 May 2022 8:21 PM GMT)
ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பாராட்டி வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பேரறிவாளன் விடுதலை ஆகியிருக்கும் நிலையில், அதே கால அளவில் சிறையில் உள்ள நளினி உள்பட மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைத்திட வழி பிறக்கும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போட்டு வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக அரசு இதுவரை இயற்றியுள்ள சட்டங்களுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான அதிகார சிக்கலுக்கு தீர்வினை இந்த தீர்ப்பு அளித்துள்ளது.
பேரறிவாளன் எஞ்சியுள்ள வாழ்நாளை அமைதியாக கழிக்கும் வகையில் அவருக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு கருணை கூர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X